பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/28/2011

"மொபைலில்' பரவும் ஆசிரியர் தேர்வு "மெசேஜ்'

சிவகங்கை : முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுவதாக, மொபைல்களுக்கு "மெசேஜ்' வருவதால், பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர். முதுகலை பட்டதாரிகளின் மொபைல் போன்களுக்கு, நவ., 27ல் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பம், அந்தந்த முதன்மை கல்வி அலுவலகத்தில், ஜூலை 25 முதல் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், பாடவாரியாக காலியிடங்கள் குறித்த விவரங்களை, "மெசேஜ்'களாக மர்ம நபர்கள் வெளியிடுகின்றனர். இதனால், பெரும்பாலான பட்டதாரிகள் விண்ணப்பம் பெறுவதற்காக, முதன்மை கல்வி அலுவலகங்களில் குவிகின்றனர்.

இது குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தால் மட்டுமே, இங்கு விண்ணப்பம் வழங்கப்படும். எந்த அறிவிப்பும் வராத நிலையில் ஏன், விண்ணப்பம் கேட்டு வருகிறீர்கள் என, திருப்பி அனுப்பி வருகிறோம்,'' என்றார்.

நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: அரசு உத்தரவு
சிவகங்கை : கட்டாயகல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனிதேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் நவ., டிசம்பர் மாதங்களில் நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு நடக்கிறது. ரயில்வேயில் "கலாசி'யாக சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெறவேண்டும். அதே போல் துப்புரவு பணியாளர்கள், பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெறவும், டிரைவிங் லைசென்ஸ் பெறவும் இத்தேர்ச்சி அவசியம். இதற்காக ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதுகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு கட்டாய கல்வி சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் தோல்வி அடைய செய்யக்கூடாது.தனித்தேர்வு மூலம் இந்த வகுப்பிற்கான தேர்வு நடத்தினால், தேர்ச்சி, தோல்வி வெளியிடவேண்டி வரும். எனவே, நடப்பு கல்வி ஆண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "" இச்சட்டத்தால் 8ம் வகுப்பு நேரடியாக படித்தால் மட்டுமே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வையும் எழுதமுடியும். இதனால், மத்திய, மாநில அரசு பணிக்கு விண்ணப்பிக்க, 8ம் வகுப்பு தகுதியாக உள்ளதால், இத்தேர்வு எழுத வழியின்றி தவிக்க நேரிடும். இனிவரும் காலங்களில் மாணவர்கள் 8ம் வகுப்புடன் கல்வியை முடித்து விடாமல், பிளஸ் 2 வரையாவது கல்வியை தொடர வேண்டும்,'' என்றார்.
 
 சிவகங்கை : கட்டாயகல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனிதேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் நவ., டிசம்பர் மாதங்களில் நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு நடக்கிறது. ரயில்வேயில் "கலாசி'யாக சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெறவேண்டும். அதே போல் துப்புரவு பணியாளர்கள், பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெறவும், டிரைவிங் லைசென்ஸ் பெறவும் இத்தேர்ச்சி அவசியம். இதற்காக ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதுகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு கட்டாய கல்வி சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் தோல்வி அடைய செய்யக்கூடாது.தனித்தேர்வு மூலம் இந்த வகுப்பிற்கான தேர்வு நடத்தினால், தேர்ச்சி, தோல்வி வெளியிடவேண்டி வரும். எனவே, நடப்பு கல்வி ஆண்டு முதல் நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "" இச்சட்டத்தால் 8ம் வகுப்பு நேரடியாக படித்தால் மட்டுமே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வையும் எழுதமுடியும். இதனால், மத்திய, மாநில அரசு பணிக்கு விண்ணப்பிக்க, 8ம் வகுப்பு தகுதியாக உள்ளதால், இத்தேர்வு எழுத வழியின்றி தவிக்க நேரிடும். இனிவரும் காலங்களில் மாணவர்கள் 8ம் வகுப்புடன் கல்வியை முடித்து விடாமல், பிளஸ் 2 வரையாவது கல்வியை தொடர வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக