தேனி, செப். 16: தேனியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடக்கக் கல்வித் துறை கலந்தாய்வுக்கு முன்பு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் நந்தகுமார், பொருளாளர் முருகானந்தராஜா, செயற்குழு உறுப்பினர் பழனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரக் கிளைத் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமமூர்த்தி, ஓய்வுபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பொன்னையா ஆகியோர் பேசினர். தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் முன்பு ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், கலந்தாய்வுக்கு முன்பு வழங்கப்பட்ட பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்யவும் வலியுறுத்தினர். பொதுக் குழு உறுப்பினர் செல்லத்துரை நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக