சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மட்டுமே காலாண்டு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி திட்ட பிரச்சினை தீர்ந்து ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில்தான் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதனால் இரண்டரை மாதத்திற்கு மேல் பள்ளிகளில் பாடங்கள் நடைபெறாமல் இருந்தது. இதனை சரிகட்டும் வகையில் தமிழக அரசு பள்ளிகளுக்கு சில உத்தரவுகளை வழங்கி வருகிறது.
அதன்படி, பள்ளிகள் இயங்கும் நேரத்தை 35 நிமிடம் அதிகரித்தும், சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கவும் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதேப்போல, காலாண்டு தேர்வுகள் அக்டோபர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்வு முடிந்த பிறகும் அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். அக்டோபர் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 6ம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக