பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/15/2011

2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குபதிவு நிலவரம் தெரிவிக்க கலெக்டர்களுக்கு உத்தரவு

நெல்லை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நிலவரத்தை 2 மணிநேரத்தி்ற்கு ஒருமுறை 7 அறிக்கைகளாக அனுப்புமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, அனைத்து மாவட்டங்களிலும், ஊரகம், டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி வாரியாக 2 மணி நேரத்திற்கு 1 முறை பதிவான வாக்கு விபரங்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உடனுக்குடன் ஆய்வு செய்து தொகுப்பு அறிக்கை தயார் செய்ய உள்ளது. எனவே 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வாக்கு பதிவு நிலவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

வாக்கு பதிவு துவக்கப்பட்டது என்ற விபரத்தை காலை 7 -7.15 மணிக்குள் முதல் அறிக்கையாகவும், 9 மணி, 11 மணி, 1 மணி, 3 மணி, 5 மணி நிலவரங்களை 5 தனித்தனி அறிக்கைகளாக ஒவ்வொரு 2 மணிநேரம் முடிந்த 30 நிமிடங்களுக்கு உள்ளும் மாலை 6 மணிக்கு இறுதி அறிக்கையாக பதிவான வாக்குளின் விபரத்தையும் அனுப்ப வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக