பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/03/2012

புதுக்கோட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட 103 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட 103 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புதுக்கோட்டையை அடுத்த வாராப்பூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியல் மாணவர்கள் வழக்கம் போல் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்திற்கு பின்பு சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்தனர். சிலர் மயக்கமும் அடைந்தனர்.

சுமார் 103 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் திடீர் வாந்தி, மயக்கத்திற்கு சத்துணவு தான் காரணம் என்று கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக