பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/02/2013

இரட்டைப்பட்டம் - வழக்கு உண்மை நிலை - ஓர் விளக்கம்

இரட்டைப்படம்  வழக்கு 1.8.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்அமர்வில் தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொழுது இரட்டைப்பட்டம் முடித்தவர்களின் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள் 4வாரம் அவகாசம் கேட்டதாகவும் அதனை எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கடுமையாக ஆட்சோபித்ததாகவும் தவறான தகவல்கள் திட்டமிட்டு சில ஆசிரியர்களால் பரப்பப்பட்டதாக திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார். உண்மை நிலவரம் என்னவென்றால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மூத்த வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் அன்று ஆஜாராக இயலவில்லை. எனவே இருதரப்பும் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து வாய்தா கேட்டதாகவும் அதனாலேயே வழக்கு 6.8.2013 அன்று ஒத்தி வைக்கப்பட்டதாகவும் வழக்கை எடுத்து நடத்தும் நண்பர்கள் தெரிவித்தார்கள். நீதியரசர்களின் கட்டளையை இரு தரப்புமே ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் உண்மைக்கு  புறம்பான செய்திகளை ஆசிரியர்கள் நம்ப வேண்டாம் எனவும் இது சம்பந்தமாக வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க வேண்டாம் எனவும் நம்மிடம் தெரிவித்தார். நண்பரின் தொடர் வேண்டுகோளுக்கிணங்க இத்தகவல் பகிரப்படுகிறது. இதனால் யாரும் வருத்தம் அடைய வேண்டாம் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 தோழமையுடன.
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக