பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/02/2013

TNPTF ன் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்- தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதி.

தொடக்கக் கல்வி இயக்குநர் - TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு.
6-9-2013 மற்றும்27-9-2013 ஆகிய இரு நாட்கள் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளனர்.
* 6-9-13 சந்திப்பு:
ஆகஸ்ட் மறியலுக்கு பின் நடைபெற்ற சந்திப்பு என்பதால் போராட்டத்தின் தாக்கம் இயக்குநரின் சந்திப்பின் போது வெளிப்பட்டது.
மறியல் போராட்டத்தின் போது பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளை நடத்துவதில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.வேலை நாளில் மறியல் என்பதால் போராட்டம் அரசின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. நீண்ட நாள்களாய் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு இயக்குநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
*27-9-13 இயக்குநர் சந்திப்பு.
இச்சந்திப்பின் போது முன்னர் கொடுத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு கோரிக்கைகளுக்கான உத்தரவுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு கிடைக்கும் என்று இயக்குநர் உறுதியளித்துள்ளார்.
*TNPTF ன் போராட்டக் கோரிக்கைகளான இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, CPS இரத்து பற்றி இயக்குநர் கவனமுடன் கேட்டுக்கொண்டதாகவும் இக்கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்களை நம்முடைய மாநிலப் பொதுச்செயலாளரும் மாநிலத் தலைவரும் மதுரையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக