பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/10/2014

ஆசிரியர் மீது சோடா பாட்டில் தாக்கு : ப்ளஸ் 2 மாணவர்கள் மீது வழக்கு

 
திருப்புவனம்: திருப்புவனம், அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை, மாணவர்கள், சோடா பாட்டிலால் தாக்கினர். காயமடைந்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், கழிப்பறை வசதி இல்லாததால், அருகில் உள்ள, வைகை ஆற்றுக்கு, மாணவர்கள் செல்கின்றனர். இதனால், சிலர், வகுப்புகளை புறக்கணிப்பதுடன், நாணல் செடிகளுக்குள் மறைந்து, தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், ஆசிரியர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களிடையே, அடிக்கடி மோதல் நடக்கிறது. ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்கள் மீது, உதவித் தலைமை ஆசிரியர், பைரவரத்தினம், நடவடிக்கை எடுத்து வந்தார். இந்நிலையில், பைரவரத்தினம், நேற்று மதியம், 2:00 மணிக்கு, வீட்டில் இருந்து, இருசக்கர வாகனத்தில், பள்ளிக்கு சென்றார். திருப்புவனம் பெரியகோயில் முன் சென்ற போது, மாணவர்கள் சிலர், பைரவரத்தினத்தை, சோடா பாட்டிலால் தாக்கினர். இதில், தலையில் காயம் அடைந்தவர், அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து, பைரவரத்தினம், மதுரையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்புவனத்தை சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியரை தாக்கியதாக, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக