பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/20/2014

காலம் கடத்துவதால் யாருக்கு பயன்? (TETOJAC)

இடைநிலை ஆசிரியர் ஊதியமாற்றம் என்பது இன்று அனைத்து சங்க ஆசிரியர்களாலும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. தனிச்சங்க நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் கூட்டு நடவடிக்கை என்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
இதில் மெத்தனம் காட்டுவதின் மர்மம் என்ன? என்பதுதான் இன்று அனைவரும் மனதிலும் எழுக்கூடிய கேள்வி. ஏன் வரத்தயங்குகிறீர்கள் என்று கேட்டால் 40 ஆண்டுக்கு முந்தைய வரலாறு சொல்வதும் அதற்கு மற்றவர்கள் பதில் சொல்வதும் நான் பெரியவன், நீ துரோகி என்ற கருத்து மோதல்கள் நடைபெறுவதும் என்பது அரசியல் களம் போல் ஆகி விட்டது. களம் அமைத்து போராடுவது பெரிய விசயமல்ல. கடைசி வரை களமாடுபவர்கள் யார் என்பதுதான் கேள்வி. கடந்த காலங்களில் நடந்த விசயங்களை மறந்து இயக்கத் தலைவர்கள் கோரிக்கை வென்றெடுக்க என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். இயக்கத்தில் பொறுப்பாளர்கள் யார் கட்டுப்பாடு இல்லாமல் சுததந்திரமாக முடிவெடுக்க முயல வேண்டும். இல்லையேல் வருங்கால சமுதாயம் நம்மை கடைநிலை ஊழியர்கள் நிலையில் கொண்டுபோய் வைத்துவிடும். கோரிக்கைகளை செவிமடுக்கும் இயக்குநராக தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளார். எனவே நம் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக அவரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதே நேரத்தில் நம் உரிமைகளை பெறுவதில் சிறிதும் தயங்காமல் ஒரு பெரிய போராட்ட நடவடிக்கையை கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிக்க வேண்டும். அறிவூட்டும் துறை தன்னுடைய உரிமையை பெற யாருக்கு அறிவூட்டுவது என தெரியாமல் திண்டாடுவது நகைப்புக்குறியதாகும். ஒற்றுமையே பலம் எனவும், கூடி வாழ்நதால் கோடி நன்மை என பாடம் நடத்தும் நமக்க யார் பாடம் நடத்துவது என்று தெரியவில்லை. இந்த கோரிக்கையை மையமாக வைத்து தெருவுக்கு ஒரு சங்ஙகம் தினமும் முளைத்துக்கொண்டிருக்கின்றன. இது நமது ஒற்றுமையின்மையை ஆட்சியாளர்களுக்கு படம் பிடித்து காட்டிவிடுகிறது. பரிதாப்ப்ட்ட இனமாய் இன்று இடைநிலை ஆசிரயர் சமுதாயம் உள்ளது. பத்திரிக்கைச் செய்திகள் யார் தலைமையேற்பது என்ற போட்டி சங்கங்களுக்கிடையில் நடக்கிறது என்று பத்தி வைக்கின்றன. இயக்கங்களை கட்டுப்படுத்தும் சக்திகள் துர விலகி நின்றாலே நமக்கான போராட்டத்தை நாம் வகுத்துக்கொள்ளலாம். ஒன்று சேர விடாமல் தடுக்கும் தீய சக்திகளை இயக்க நடவடிக்கைகளிலிருந்து துரத்தியடியுங்கள். நமக்கான உரிமையை நாம்தான் போரடி பெற வேண்டும். இங்கு யாருடைய தயவும் தேவையில்லை. எத்தனை காலம்தான் வாய் மூடி மௌனமாக காலம் கடத்த போகிறோம். முதலில் நாம் சார்ந்துள்ள இயக்கத்தில் நமக்கான உரிமையை கேட்டுப் பெறுங்கள். அதன்பின் அரசிடம் உள்ள உரிமைகளை கேட்பதற்கு துணிந்து விடுவீர்கள். பலங்கதைகள் பேசி நம்மை மழுங்கடிக்கும் நாசகார கும்பல்களிடம் இருந்து விடுதலை கோருங்கள். நமக்கான விடியல் வெகு தொலைவில் இல்லை. மீண்டும் எச்சரிக்கை செய்கின்றேன். உரிமை மீடக ஒன்று கூடுவோம். வென்றெடுப்போம்.

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!

உரிமையை போராடிப் பெறுவோம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக