பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/13/2014

மாஸ்டரின் நினைவில் .

“இவன் பாட்டாளி மக்களில் ஒருவன்; பாட்டாளிவர்க்கத்துக்காக வாதாடியவன்; போராடியவன்” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட மாஸ்டர் நம்மை விட்டு மறைந்து 41 ஆண்டுகள் முடிந்துவிட்டன.13.7.2014ல் மாஸ்டரின் 106வது பிறந்த நாள். இயக்கநிறுவனர் மாஸ்டர் இராமுண்ணியின் இலட்சியங்களை உயர்த்திப்பிடித்து 2.8.1984ல் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’ என்ற புதியபதாகையின்கீழ் சமரசமற்ற போராளிகளாக நாம்மீண்டும் இயக்கப்பயணத்தைத் தொடர்ந்தோம்.நாம் மேற்கொண்ட அந்தப்பாதைமாறாப் பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து 2.8.2014ல் 31ஆம் ஆண்டில் தடம்பதிக்கிறது. இந்த30 ஆண்டுகளில் மாஸ்டரின்வழியில் இயக்கம் பெற்றுள்ள வெற்றிகளையும், இன்று நம்முன் எழுந்துள்ள சவால்களையும் ஒருவிமர்சனக்கண்ணோட்டத்துடன் பரிசீலிக்கவேண்டிய ஒருவரலாற்றுத்தேவை நம்முன் எழுந்துள்ளது. இந்தப்பொருத்த மான நேரத்தில் 2002ல் இயக்கம் வெளியிட்ட “இயக்கம்கண்ட நாயகன் மாஸ்டர் இராமுண்ணி” என்ற வரலாற்றுநூலைத் தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயம் நினைவு படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும். இதுவரை நாம்கடந்துவந்தபாதையை மீள்பார்வை செய்திடவும், இனிமேல் கடக்க வேண்டிய பாதையைப்பற்றிய தெளிவான ஞானம்பெறவும் மாஸ்டர் இராமுண்ணி யின் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு ஒருபுதிய வெளிச்சத்தைத் தரும்: தரவேண்டும்.
 Che Natesan
2014 ஜூலை13


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக