பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/14/2014

1,963 பள்ளிகளில் கழிவறை வசதியில்லை: மனிதவள அமைச்சக இணையதளம்

கோவை: கோவை மாவட்டத்தில், 1,963 பள்ளிகளில் கழிவறை வசதியில்லை என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளிலேயே, அடிப்படை கழிவறை கட்டமைப்பு வசதி, தற்காலிகமாக இல்லாமல் இருப்பதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில், 1,090 துவக்கப்பள்ளிகள், 307 நடுநிலை, 185 உயர்நிலை மற்றும் 306 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 1.66 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு வாயிலாகவும், ஆர்.எம்.எஸ்.ஏ., (மத்திய இடை நிலைக் கல்வி திட்டம்) மற்றும் எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) வாயிலாகவும், ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 1,963 பள்ளிகளில் கழிவறை வசதியில்லை என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது, பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இணையதள தகவலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, கோவையில் சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளில் மட்டுமே கழிவறை கட்டமைப்பு இல்லாமல் இருப்பதாகவும், கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்புள்ளி விபரங்கள் குறித்து, கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், "மத்திய மனிதவள அமைச்சகத்தின் தகவல், சரியானதாக குறிப்பிடப்படவில்லை. ஏனெனில், 50 மாணவர்களுக்கு ஒரு கழிவறை, 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது விதிமுறை.
இவ்விதிகளின்படி பார்த்தால், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்திலுமே, கழிவறை வசதிகளை முழுமைப்படுத்தியிருக்க முடியாது. இதுபோன்ற விதிமுறைகளின்படி, பள்ளிக்கல்வித் துறையில் பெரும்பாலான சேவைகள் இருப்பதில்லை. அடிப்படை கழிவறை வசதிகூட இல்லாமல், பள்ளிகள் இயங்க வாய்ப்பில்லை. அப்படி இருப்பின், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திகொள்ள, உரிய தலைமையாசிரியர் முயற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம்" என்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், "சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளில் மட்டுமே, அடிப்படை கழிவறை வசதிகள் தற்காலிகமாக இல்லை. இதை சரிப்படுத்த, அரசின் நிதிக்காக காத்திருக்கிறோம். மற்றபடி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வு சமயங்களில், தேர்வெழுத வரும் பெண்களுக்காக தனிப்பட்ட கழிவறை வசதி இல்லை என்பது போன்ற குறைபாடுகளே உள்ளன.
ஆண்டுதோறும் அரசால் அளிக்கப்படும் நிதியில், கழிவறை, அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்காக மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் ஆதாரமற்றவை" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக