பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

5/27/2011

சமச்சீர் கல்வித்திட்டம் உறுதியாக அமலாக்கப்படும்-கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டத்தை கை விடும் நோக்கம் அரசுக்கு இல்லை. ஆனால், திட்டத்தை அரை குறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது. சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சி.வி. சண் முகம் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பல முக்கிய முடிவுகளை அதிமுகவின் அமைச்சரவை எடுத்துள்ளது. அதில் சமச்சீர் கல்வி அமலாக்கம் சம்பந்தமான முடிவு, பெற் றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதன் அமலாக்கம் குறித்து குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி யிருந்தது.

ஏற்கெனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமச்சீர் கல்வி சம்பந்தமான தனது நிலை பாட்டை விளக்கி, அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்து 24.5.2011 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ மற்றும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்து உரையாடினர்.

இன்று, சமச்சீர் கல்வி அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், குழப்பங்களையும் அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர். கல்வித்துறை அமைச்சர் பொறுமையாக விஷயங்களைக் கேட்டறிந்த பின்னர், சமச்சீர் கல்வித்திட்டம் உறுதியாக அமலாக்கப்படும் எனவும், அதைக் கை விடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதையும் தெரிவித்தார்.
மேலும் அமைச்சரவை முடிவின்படி, இன்றுள்ள திட்டத்தை அரை குறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது எனவும், ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்த பின் அதன்படி சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்களுக் கும் தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளி கல்விக் கட்டணங்களை அவர் கள் கட்டக் கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அ.சவுந்தரராசன் அமைச்சரிடம் முன்வைத்தார். அமைச்சரவை அதுகுறித்து பரிசீலனை செய்யும் என்பதையும் அமைச்சர் தெரி வித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கனகராஜ், ராஜ் மோகன், ஸ்டாலின் மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டு எஸ்எப்ஐ சார்பாக மனு ஒன்றையும் அளித்தனர். மேலும் மாணவர் அமைப்புகள் சார்பாக சமச்சீர் கல்வி, கல்விக் கட்டணங் கள், கல்வி உரிமைச் சட் டம், சாதிச் சான்றிதழ் பள்ளிகளிலேயே வழங்குதல், பள்ளிகளில் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்தல் ஆகிய விஷயங்கள் குறித்த பல கோரிக்கைகளையும் அவர்கள் தெரிவித்தனர். பதவியேற்று ஒரு வாரமே ஆகியுள்ள சூழ்நிலைமையைச் சுட்டிக்காட்டி விரைவில் இவை குறித்து தேவையான முடிவுகளை அரசு எடுக்கும் எனவும் அமைச் சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டத்தை கை விடும் நோக்கம் அரசுக்கு இல்லை. ஆனால், திட்டத்தை அரை குறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது. சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் சி.வி. சண் முகம் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பல முக்கிய முடிவுகளை அதிமுகவின் அமைச்சரவை எடுத்துள்ளது. அதில் சமச்சீர் கல்வி அமலாக்கம் சம்பந்தமான முடிவு, பெற் றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதன் அமலாக்கம் குறித்து குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி யிருந்தது.

ஏற்கெனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமச்சீர் கல்வி சம்பந்தமான தனது நிலை பாட்டை விளக்கி, அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்து 24.5.2011 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ மற்றும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்து உரையாடினர்.

இன்று, சமச்சீர் கல்வி அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், குழப்பங்களையும் அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர். கல்வித்துறை அமைச்சர் பொறுமையாக விஷயங்களைக் கேட்டறிந்த பின்னர், சமச்சீர் கல்வித்திட்டம் உறுதியாக அமலாக்கப்படும் எனவும், அதைக் கை விடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதையும் தெரிவித்தார்.
மேலும் அமைச்சரவை முடிவின்படி, இன்றுள்ள திட்டத்தை அரை குறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது எனவும், ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்த பின் அதன்படி சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்களுக் கும் தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளி கல்விக் கட்டணங்களை அவர் கள் கட்டக் கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அ.சவுந்தரராசன் அமைச்சரிடம் முன்வைத்தார். அமைச்சரவை அதுகுறித்து பரிசீலனை செய்யும் என்பதையும் அமைச்சர் தெரி வித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கனகராஜ், ராஜ் மோகன், ஸ்டாலின் மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டு எஸ்எப்ஐ சார்பாக மனு ஒன்றையும் அளித்தனர். மேலும் மாணவர் அமைப்புகள் சார்பாக சமச்சீர் கல்வி, கல்விக் கட்டணங் கள், கல்வி உரிமைச் சட் டம், சாதிச் சான்றிதழ் பள்ளிகளிலேயே வழங்குதல், பள்ளிகளில் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்தல் ஆகிய விஷயங்கள் குறித்த பல கோரிக்கைகளையும் அவர்கள் தெரிவித்தனர். பதவியேற்று ஒரு வாரமே ஆகியுள்ள சூழ்நிலைமையைச் சுட்டிக்காட்டி விரைவில் இவை குறித்து தேவையான முடிவுகளை அரசு எடுக்கும் எனவும் அமைச் சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக