- இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாயமாக கல்வி பெற உரிமை உண்டு. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேராமலோ அல்லது இடையில் நின்றிருந்தாலோ, அன்றைய வயதுக்கேற்ப வகுப்பில் சேரலாம்.
- சேர்க்கையின்போது மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. நுழைவுத்தேர்வு போன்ற எவ்வித பரிசீலனைக்கும் உட்டுபடுத்தக்கூடாது. வயது சான்றிதழ் இல்லாத நிலையில் அதை காரணமாகக்கூறி சேர்க்கை மறுக்கக்கூடாது. சேர்க்கைக்கு குறிப்பிட்ட கால அவகாசம் முடிவடைந்திருந்தாலும் தாமதமாக வரக்கூடியவர்களை பள்ளியில் சேர்க்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
5/08/2011
அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
லேபிள்கள்:
கோப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக