பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/29/2011

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

கம்பம், ஜூலை 27:÷சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கம்பம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ÷ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணி வட்டாரக் கிளைத் தலைவர் ஏ.ஜெகநாதன் தலைமை வகித்தார். கள்ளர் பள்ளிகளின் சங்கக் கிளைத் தலைவர் எஸ்.மல்லையராஜா முன்னிலை வகித்தார். நகரக் கிளைச் செயலாளர் பி.ஜோசப்ராஜ் வரவேற்றார்.  ÷மாவட்டச் செயலாளர் சு.நந்தகோபால், கள்ளர் பள்ளிகளின் மாவட்டக் கிளையின் பொருளாளர் எம்.பி.புதியவன் ஆகியோர் பேசினர்.  ÷ஆர்ப்பாட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, முந்தைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். 6-வது ஊதிய மாற்றக் குறைபாடுகளை களைந்திடவும், மத்திய அரசு ஊழியர்களுக்குச் சமமாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவும், வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு முறையை தொடர்ந்து அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  ÷கள்ளர் பள்ளிகளின் சங்கக் கிளைச் செயலாளர் ரா. ராஜ்குமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக