பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/08/2011

கேட் தேர்வெழுத 2.05 லட்சம் பேர் பதிவு

இந்தியாவில் உள்ள ஐ.ஐ.எம். மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களிலும் சேர்வதற்கு நடத்தப்படும் கேட் தேர்வை எழுத சுமார் 2.05 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ள டெல்லி, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் அக்டோபர் 22 மற்றும் நவம்பர் 18ம் தேதிகளில் ஆன்லைனில் தேர்வு நடைபெற உள்ளது.
கேட் 2011 தேர்வு எழுத பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கல் அக்டோபர் 1ம் தேதியுடன் நிறைவு பெற்றுவிட்டது. இதுவரை 2.06 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய அக்டோபர் 4ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் வரை 2.05 மாணவர்கள் காட் தேர்வு எழுத தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்துள்ள மாணவ, மாணவிகளில் 73 சதவீதம் பேர் மாணவர்கள் ஆவர். இதுவரை 3 தேர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டில் 2 தேர்வுகள் மட்டுமே நடைபெற உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் 70 நிமிடங்கள் கால அவகாசம் அளிக்கப்படும்.
இது குறித்து பேசிய தேர்வு அமைப்பாளர்கள், தேர்வெழுத பதிவு செய்துள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதும், அவர்களது தேர்வு மையங்களை சரிபார்த்துக் கொள்வதும் நல்லது என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 2.4 லட்சம் மாணவரக்ள் கேட் தேர்வு எழுத பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக