பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/14/2011

பள்ளி முடியும் நேரம், அரை மணிநேரம் நீட்டித்து உத்தரவு : பாடம் நடத்தாத நாட்களை ஈடுசெய்ய நடவடிக்கை

சமச்சீர் கல்வி வழக்கு பிரச்னையால், ஒன்றரை மாதம் வகுப்புகள் நடக்காததால், அந்த நாட்களை ஈடு செய்யவும், திட்டமிட்டபடி பாடங்களை நடத்தி முடிக்கவும், பள்ளி முடியும் நேரத்தை அரை மணி நேரம் நீட்டிப்பு செய்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின், வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் துவங்கும். ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டதால், பள்ளிகள், 15 நாட்கள் தாமதமாக துவங்கப்பட்டன. இதற்கிடையே, சமச்சீர் கல்வி விவகாரம், கோர்ட்டுக்குச் சென்றதால், மேலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்புகள் ஒன்றரை மாதம் நடைபெறவில்லை.
இறுதியில், சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபின், பள்ளிகளுக்கு காலதாமதமாக சமச்சீர்கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடப்புத்தங்கள் சென்று சேர மேலும் பல நாட்கள் ஆகின. இதனால், இரண்டு மாதங்களுக்குப் பிறகே வகுப்புகள் ஆரம்பித்தன.
வழக்கமான கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தவேண்டுமெனில், அதற்குரிய காலகட்டத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கு, தற்போது கால அவகாசம் இல்லாத நிலை உள்ளது. இதனால், வகுப்புகள் நடக்காத நாட்களை ஈடுகட்டுவதற்காக, ஏற்கனவே சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தனியார் பள்ளிகள், சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்குகின்றன.
இந்நிலையில், அனைத்து வகையான பள்ளிகளுக்கும், பள்ளி முடியும் நேரத்தை அரை மணி நேரம் நீட்டிப்பு செய்து, பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம், ஓரளவுக்கு பாடம் நடக்காத நாட்களை ஈடுகட்டி, குறித்த நேரத்தில் பாடங்களை நடத்தி முடிக்க முடியும் என்று, பள்ளிக் கல்வித்துறை நம்புகிறது. அரசின் உத்தரவையடுத்து, சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள பள்ளிகளின் முடியும் நேரம், நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களுக்கு சிக்கல்: நேர நீட்டிப்பு குறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "பள்ளி முடிந்ததும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும். தற்போது அரை மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், நகரங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பிரச்னை வராது. ஆனால், கிராமப்புறங்களில், பஸ் வசதி குறைவாக இருக்கும் இடங்களில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், நேர நீட்டிப்பால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்' என்றார்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில்... : பள்ளி துவங்கும் நேரம்: காலை 8.40, முடியும் நேரம்: 3.30, இனி: மாலை 4 மணி கிராமப்புற பகுதிகளில்... பள்ளி துவங்கும் நேரம்: 9.45, முடியும் நேரம்: 4.30, இனி: மாலை 5 மணி.

Yahoo! தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக