பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 19, 20ஆகிய நாள்களில் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள், சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக