சிவகங்கை, : காலிப் பணியிடங்களால் தொடக்க கல்வித்துறையில் கோப்புகள் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. தவிர 5,071 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், 1,608 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகமும், வட்டார அளவில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஆசிரியர்களுக்கு ஊதியம், பணப்பலன், இடமாறுதல், பதவி உயர்வு, மாணவர்களுக்கான அரசு நலத்திட்டங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள், உதவித் தொடக்க அலுவலங்களில் ஏரளமான டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் பல்வேறு கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தவிர கோர்ட் வழக்குகளை நடத்துவதிலும் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து இப்பிரச்னையை தீர்க்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை (8ம் தேதி) சென்னையில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களுக்கான கூட்டத்தை தொடக்கக் கல்வித்துறை நடத்த உள்ளது.
மேலும் இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவு:
மாவட்டத் தொடக்கக்க அலுவலரின் நேர்முக உதவியாளர்களுக்கான கூட்டம் 8ம் தேதி காலை 10மணிக்கு சென்னை தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. கூட்டத்திற்கு வரும்போது கீழ்க்கண்ட விவரங்களை கொண்டு வர வேண்டும்.
* மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிட விவரம்.
* மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒவ்வொரு பிரிவிலும் நிலுவையில் உள்ள கோப்புகள் விவரம்.
* வழக்குகள் சார்ந்த பதிவேடு மற்றும் வழக்கு சார்ந்து நிலுவையில் உள்ள கோப்புகள் விவரம்.
* மாவட்ட அளவில் அனைத்து வகை ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் விவரம். * அனுமதிக்கப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிடங்கள் விவரம்.
* உதவித் தொடக்கக் கல்வி அலுவலங்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிட விவரம்.
* மாவட்ட அளவில் இயக்குநருடன் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. தவிர 5,071 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், 1,608 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகமும், வட்டார அளவில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஆசிரியர்களுக்கு ஊதியம், பணப்பலன், இடமாறுதல், பதவி உயர்வு, மாணவர்களுக்கான அரசு நலத்திட்டங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள், உதவித் தொடக்க அலுவலங்களில் ஏரளமான டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் பல்வேறு கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தவிர கோர்ட் வழக்குகளை நடத்துவதிலும் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து இப்பிரச்னையை தீர்க்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை (8ம் தேதி) சென்னையில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களுக்கான கூட்டத்தை தொடக்கக் கல்வித்துறை நடத்த உள்ளது.
மேலும் இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவு:
மாவட்டத் தொடக்கக்க அலுவலரின் நேர்முக உதவியாளர்களுக்கான கூட்டம் 8ம் தேதி காலை 10மணிக்கு சென்னை தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. கூட்டத்திற்கு வரும்போது கீழ்க்கண்ட விவரங்களை கொண்டு வர வேண்டும்.
* மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிட விவரம்.
* மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒவ்வொரு பிரிவிலும் நிலுவையில் உள்ள கோப்புகள் விவரம்.
* வழக்குகள் சார்ந்த பதிவேடு மற்றும் வழக்கு சார்ந்து நிலுவையில் உள்ள கோப்புகள் விவரம்.
* மாவட்ட அளவில் அனைத்து வகை ஆசிரியர்களின் காலிப் பணியிடங்கள் விவரம். * அனுமதிக்கப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிடங்கள் விவரம்.
* உதவித் தொடக்கக் கல்வி அலுவலங்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் மற்றும் காலிப் பணியிட விவரம்.
* மாவட்ட அளவில் இயக்குநருடன் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக