பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/21/2013

எழுந்திரு தோழா! விடியல் உனக்காக காத்திருக்கு.......





TNPTF

என் இனிய தோழனே! நாளைய விடியல் நமக்காக, நமது ஊதிய மாற்றத்திற்கான விடியலாக இருக்கட்டும். உலகின் எந்த தேசத்திலும் உழைக்கும் வர்க்கத்தை முடக்கி அந்த தேசம் உயர்ந்ததாக வரலாறு இல்லை. உழைப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் ஆள்பவர்களின் அடிநாதமே ஆட்டம் கண்டு விடும். இந்த நாட்டை ஆளும் முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் தானகவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தயங்குகிறார் என்றால் ஒன்று நம்மிடம் ஒற்றுமையில்லை அல்லது முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுத்த இடை;யில் குள்ள நரி கூட்டம் அரசு அதிகாரிகள் என்ற பெயரில் தன்னுடைய தீரா பகையை பாவப்பட்ட இடைநில ஆசிரியரிடம் வஞ்சம் தீர்த்துகொள்ள முனைகிறது. இந்த குள்ள நரிகளை கூண்டோடு விரட்டி அடிக்க இயக்கம் பாராமல் இடைநிலை ஆசிரியர்களே ஆகத்து-30ல் உன் மாவட்ட மறியலை வெற்றியாக்கிடு. அளவு மாற்றம் குண மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே நீ திரட்டப்போகின்ற கூட்டம்தான் உன் ஊதியத்தை மாற்றும். நீ கோபத்துடன் இருக்கிறாய் என்பதை நான் நன்கு அறிவேன். கூட்டு போராட்டத்திற்கு வேட்டு வைக்க நயவஞசகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆட்சியாளர்களின் கோபகனைகள் தன்மீது பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக உள்ளது. நாம் அப்படி அல்ல. நமது உரிமைகளை அடைய பல போராட்டங்களில் களம் கண்டவர்கள். நமது பிரச்சனைகளக்கு மட்டுமில்லாது மாணவர், தேச நலனுக்காக பல போராட்டங்களை கண்டவர்கள். மற்ற இயக்கங்கள் செய்ய மறந்த - செய்ய மறுத்த கோரிக்கைகளை நாம் கையிலெடுத்து வெற்றி பெற்று இருக்கிறோம். இயக்கம் உனக்கு கட்டளையிட்ட ஆசிரியர் சந்திப்புக்களை நடத்தி அவர்களை களம் காண தயார்படுத்து. ஒன்றுபட்ட போராட்டம் வெற்றியைத்தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மாற்று கருத்து உள்ள இயக்க தலைமைகளை ஒன்றினைப்பதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முனைப்பாக உள்ளது. அது ஒரு பக்கம் இருந்தாலும் ஆகத்து-30 ஆள்பவர்களை அசைத்து பார்க்கும் நாளாக அமையட்டும். உனது மறியல் போர் மாநிலத்தையே குலுக்கட்டும். பள்ளி வேலை நாளில் செய்யும் மறியல்தான் மாற்றத்தை ஏற்படுத்தும். மாற்றம் எற்படும் வரை மாற்றி அமைக்க இந்த படை தயாராகவே உள்ளது என்பதை குள்ள நரி கூட்டம் உணரட்டும். ஒவ்வொரு இடைநிலை ஆசிரியனும் 10 ஆசிரியர்களை போராட்ட களத்திற்கு அழைத்து வருவதை சபதமாக எடுத்துக்கொள். பகல் வேஷம் போட்டு பகட்டு காட்டி ஆசிரியர்களை அடி முட்டாள் ஆக்குவதை அனுமதியோம்.
புறப்படு புயலென. நாளைய விடியல் நமக்காக...
சரித்திரம் மாற்றும் சாதனை படைப்போம்.
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF  மாவட்டத்தலைவர், சிவகங்கை மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக