பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/19/2013

மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறும் மாணவர்களை தடுக்க கோரிக்கை

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறி வருவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறுமை மற்றும் பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்லாமல், பல குழந்தைகள் பல்வேறு கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், ஒரு சில குழந்தைகள் சிறு வயது முதல் பேப்பர் பொறுக்குதல், மது பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்தல் போன்ற செயல்களை செய்து வருகின்றனர். இவர்கள் சமூக விரோதிகளாகவும் மாறி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் இடைநின்று குழந்தை தொழிலாளர்களாக மாறும் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறார் பள்ளிகள் யூனியனுக்கு இரண்டு என்று மொத்தம் 20 பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் கண்டறிந்து இப்பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இந்த ஆண்டு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை சிறப்பு பள்ளியில் சேர்த்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பல குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் நாள் ஒன்றுக்கு நான்கு மாணவர்களுக்கு மேல் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் வருகை பதிவை போட்டு அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் மாத சம்பளம் வாங்குகின்றனர்.
குறிப்பாக, காவேரிப்பட்டணம் ஜீவாநகர் மற்றும் அம்பேத்கார் நகர் ஆகிய, இரண்டு இடங்களில், அதிக அளவில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அங்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறார் பள்ளிகளில் 50 குழந்தைகள் படிப்பதாக வருகை பதிவேட்டில் உள்ளது.
இந்த, இரண்டு பள்ளிகளிலும் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் மீண்டும் தொழிற்சாலைகளுக்கும், பேப்பர் பொறுக்குதல், பாட்டில் பொறுக்குதல் போன்றவற்றை செய்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சிறார் பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மாணவர்கள் வருகின்றனர்; எத்தனை பேர் வருவதில்லை என்பதை அந்தந்த வட்ட உதவி திட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட திட்ட அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்ய வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆய்வில், மாணவர்கள் இல்லாமல் பொய்யான வருகை பதிவை போடும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து எந்த நோக்கத்திற்காக சிறார் சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக