பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/07/2014

ஆசிரியர் பயிற்றுனர் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை திட்டம்

சிவகங்கை: அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் (எஸ்.எஸ்.ஏ.,) கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றிய வட்டார மேற்பார்வையாளர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து முதுநிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் 115 பேரும் அரசுப் பள்ளி ஆசிரியராக மாறுதல் செய்யப்பட்டனர். இதில் எஞ்சிய ஆசிரியர் பயிற்றுனர்கள் 500 பேரை விரைவில் அரசு பள்ளி ஆசிரியராக மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களை கொண்டே இத்திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: 10 ஆண்டுகளை கடந்த இத்திட்டம் இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது; இதற்கான நிதி ஒதுக்கீடும் குறைந்துவிட்டது. மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்காயிரம் பயிற்றுனர்களை 10 பள்ளிகளுக்கு ஒரு பயிற்றுனர், மேற்பார்வையாளர் என நியமித்து திட்டம் நிறைவு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக