ஆசிரியர் இயக்கங்கள் சார்பாக (டிட்டோஜாக்) 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6.3.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றோரின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து அதற்கான விபரத்தை தொடக்கக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். வேலை செய்யாததற்கு ஊதியம் பிடித்தம் என்பது ஏற்புடையது என்றாலும் தேர்தல் நேரத்தில் உரிமை வேண்டி போராடியதற்கு ஊதியம் பிடித்தம் என்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தொடக்கக்கல்வி இயக்குநரை சந்திந்த மாநிலப் பொறுப்பாளர்களிடம் ஊதியம் பிடித்தம் இருக்காது எனவும் அதற்கான வாய்மொழி உத்தரவை அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளதாக உறுதி அளித்துள்ளார். ஊதிய பிடித்தம் என்பது பெரிய விசயமல்ல. கோரிக்கைகள் வென்றெடுப்பதே நமது இலட்சியம் என்பதே நம் நிலைப்பாடு. அரசாங்கம் நியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக