பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/06/2015

முகவரி இல்லாமல் முணுமுணுப்பவரின் முகத்திரையை கிழித்தெறிந்து உண்மையை உணர்த்திடு தோழா...


இனிய தோழமையே...
ஜேக்டோ வேலை நிறுத்த களப்பணியில் நீ களைத்திருக்கும் வேலையில் முகவரியில்லா சங்கங்களை வைத்து வேலை நிறுத்தம் வாபஸ் என்று ஊடகங்களில் அளிக்கும் பேட்டிதான் இந்த ஆண்டின் தலை சிறந்த நகைச்சுவையாக இருக்கும் என்பதை நீ அறிவாய். கடந்த இரண்டு நாட்களாக நாம் இதுவரை அறிந்திராத பெயர்களில் சங்கம் என்ற பெயரில் நாங்கள் ஜேக்டோ வேலை நிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என்ற அறிவிப்புகள் நம் வீட்டு மழலைகளின் ஏளனத்திற்கு சிரிப்புக்கும் ஆளான செய்தி நீ அறிவாய்.
ஜேக்டோவின் உறுதியை அறிந்த அரசு ஆளே இல்லாத இயக்கங்களின் தலைவர்களை வைத்து வாபஸ் நாடகத்தை அரங்கேற்ற துவங்கியுள்ளது. ஒரு பக்கம் பேச்சு வார்த்தை மறுபக்கம் குழப்பம் விளைவிக்கும் போக்கு. தனிச்சங்க நடவடிக்கையிலேயே இந்த சூட்சமத்தையெல்லாம் உடைந்தெறிந்த உனக்கு இன்று அசுர பலத்தோடு களம் காணும்பொழுது இதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பதை நானறிவேன். இருந்தாலும் வதந்திகளுக்கு வரப்பில்லை. வாய்ப்பு கிடைக்குமிடமெல்லாம் அது வழிந்தோடும் என்பதால் நீ கொஞ்சம் கவனத்தோடு களப்பணியாற்று. இரண்டு நாட்களாக உனது ஆசிரியர் சந்திப்பில் 100 சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள் என்ற மகிழ்வான செய்தி அறிந்து நானும் பெருமையடைந்தேன். உளவு துறை மூலம் அரசின் செவிகளுக்கும் இது எட்டியுள்ளது என்பதுதான் உண்மை.
  இடைநிலை ஆசிரியர்களின் துயர் துடைக்க பிறந்த அவதாரம் என்று தன்னை பிரகடனம் செய்துள்ளவர்களின் இன்றைய டி.வி. பேட்டி அவர்களின் முகத்திரையை கிழத்தெறிந்து உண்மை முகத்தை இந்த உலகிற்கு காட்டியுள்ளது. பழமைவாத சங்கங்கள் என்று நம்மைப்பற்றி குறை கூறி நம்மை போன்ற இடைநிலை ஆசிரியரியர்களை ஏமாளியாக்க ஆடிய கபட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 15 அம்ச கோரிக்கையில் நமது பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியரின் தர ஊதிய மாற்றம், எதிர் கால வாழ்க்;கையை கேள்வி குறியாக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம ஒழிப்பு இருந்தபொழுதும் ஏன் இந்த எதிர் சவுடால்.
ஒன்றை மட்டும் சக ஆசிரியர்களுக்கு தெளிவு படுத்த மறந்து விடாதே. ஊடகங்கள் வாயிலாக வேலை நிறுத்தம் வாபஸ் மற்றும் பங்கேற்க போவதில்லை என்று வெற்று அறிவிப்புகள் வெளியிடும் சங்கங்கள் எதுவும் ஜேக்டோவில் இல்லையென்ற உண்மையையும், இவைகள் ஆளும் கட்சிகளாக வரும் அரசியல் தலைவர்களின் அடிவருடிகளாக மாறி ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக நடக்கும் பகல் வேடதாரிகள் என்பதை மட்டும் தெளிவு படுத்து தோழா. அக்டோபர் 8 பதில் சொல்லட்டும்.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!  உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்....
தோழனாக...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச் செயலாளர் 
சிவகங்கை மாவட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக