பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

6/27/2011

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு : தமிழகத்தில் அதிக ஆர்வம்

சென்னை : மத்திய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இதில் பங்கேற்றனர். ஒன்று முதல் எட்டு வரையுள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர்களை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் விதிகளின்படி தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என, அனைவருக்கும் கல்வி உரிமைக்கான சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

இதற்கான தேர்வு, முதல் முறையாக நேற்று நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்பட்டது. மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில், சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் இத்தேர்வு நடந்தது.

சென்னையில் நுங்கம்பாக்கம், கே.கே.நகர்., அண்ணா நகர் உட்பட 31 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. காலை மற்றும் பிற்பகலில் நடந்த இத்தேர்வை ஏராளமான ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று எழுதினர். காலையில் இடைநிலை ஆசிரியர்களும், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்டது.

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை, நாடு முழுவதும் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியதாக கூறப்பட்டது. தேர்வு முடிவுகள், வரும் ஜூலை 26ம் தேதி வெளியிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக