பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/11/2011

1,000 ரூபாய் லஞ்சம் தொடக்கக் கல்வி அலுவலக ஊழியர் கைது

காரிமங்கலம்: காரிமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவியாளரை போலீஸார் கைது செய்தனர். காரிமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் வாசுதேவன் (37). முருக்கம்பட்டி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் குமார். இவர் பி.எட்., தற்போது முடித்துள்ளார். இதால், ஊதிய உயர்வுக்கான ஆவணங்களை தயார் செய்ய வாசுதேவனை அணுகியுள்ளார்.
வாசுதேவன், 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த குமார் தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் ஆலோசனையின் படி நேற்று மாலை குமார், காரிமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்று வாசுதேவனிடம், 1,000 ரூபாய் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., நாச்சியப்பன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் குழுவினர் வாசுதேவனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Dinamalar - No 1 Tamil News Paper

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக