இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

புதன், மே 08, 2013

வாழ்த்துகிறோம்



நாளை  ( 9.5.13 ) நடைபெறும் பதவி ஏற்பு விழாவிற்கு அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.

கோரிக்கைகள் வென்றெடுக்க வாழ்த்துகிறோம்

கல்வி மானிய கோரிக்கையில் நமது கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டி முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களை நமது மாநிலப் பொறுப்பாளர்கள் நாளை (9.5.13) சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

அரசானை 216ன் படி விபரம் கோருதல்

IGNOU B.Ed. Prospectus for the January 2014 Admission


APPLICATION FEE RS.1000
COURSE FEE RS.20000
LAST DATE 15.07.2013
ENTRANCE DATE : 18.18.2013

CLICK HERE FOR IGNOU B.Ed. Prospectus for the January 2014 session

01.01.2011 ஆம் ஆண்டு தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற்று உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களாக தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு பெற்றோர்க்கு 10858 முதல் 11395 வரை பணி வரண் முறை செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

பதவி உயர்வு பட்டியல் 2013

சிங்கம்புணரியில் ஆட்டம் காணும் அரசு குடியிருப்புகள்

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அரசு குடியிருப்புகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
சிங்கம்புணரி அரசு பள்ளி அருகே அரசு அலுவ லர் குடியிருப்புகள் உள்ளன.  1967ல் கட்டப்பட்ட இக்குடியிருப்பில் ‘சி’, ‘பி’ பிளாக் கில் மொத்தம் 40 வீடுகள் உள்ளன. ஆசிரியர்கள், பிற துறை அரசு அலுவலர்கள் இங்கு குடியிருந்து வருகின்றனர். ராமநாதபுரம் வீட்டுவசதி வாரியத்திற்குட்பட்ட இக்குடியிருப்பு கள் கட்டப்பட்டு 45 ஆண்டுகளாகி யும் இதுவரை பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் உள்ளன. வாடகை குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் சேதமடைந்த கட்டிடம் என எண்ணாமல் அரசு அலுவலர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
வீட்டின் மேற்கூரைகள், படிக்கட்டுகள் அனைத்தும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சிதிலமடைந்த மேற்கூரைகள் வீட்டில் வசிப்பவர்கள் மீது விழுந்து காயங்களை ஏற்படுத்துகின்றன.  மழைக்காலங்களில் வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. இதனால் பூச்சி கள், பாம்புகள் கூட சமயத்தில் வந்து விடுவதாக வசிப்பவர்கள் கூறுகின்ற னர். எனவே குடியிருப்பு பகுதியை முழுவதுமாக இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துபாண்டியன் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, புதூர் ஒன்றியங்களை மட்டும் வகைப் படுத்தப்பட்ட வீட்டு வாடகை பட்டியலில் சேர்க்காததால் குறைந்த வாடகைப்படி வழங்கப்படுகிறது. இங்கு ‘பி’ பிரிவில் குடியிருப்பவர்களுக்கு 3 சதவீதமும், ‘சி’ பிரிவில் குடியிருப்பவர்களுக்கு 2 சதவீதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் குறைந்த வாடகையில் சேதமடைந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.  சிங்கம்புணரியில் உள்ள அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் அனைத்தும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடங்களை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை வீட்டுவசதி வாரியத்திற்கு புகார் அனுப்பியுள்ளோ£ம்.  2 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் வீட்டுவசதி வாரியத்திலிருந்து ஒரு குழு வீடுகளை பார்வையிட்டது. பின்னர் அனைத்து வீடுகளையும் இடித்து விட்டு 200 புதிய வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறினர். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
 

ஞாயிறு, மே 05, 2013

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இறப்பு / இயலாமையால் ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை பெற தற்காலிகமாக அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவு


          புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ நமோ நாராயன் மீனா அவர்கள் அளித்த பதில் உரையில், ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய விதிகளின் படியே புதிய பங்களிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்களில் இறப்பு / இயலாமை ஆகிய காரணங்களால் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர் / ஊழியர் குடும்பங்களுக்கு பணிக்கொடை தற்காலிகமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், ஓய்வூதியத்தில் மட்டும் தான் மாற்றம் கொண்டுவரப்பட்டதே தவிர பணிக்கொடை மற்றும் ஏனைய பலன்களில் எவ்வித மாற்றமும் மத்திய அரசு செய்யவில்லை என்று நேற்று மக்களவையில் தெரிவித்தார். இது குறித்த மத்திய அரசு சுற்றறிக்கை எண்.38/41/06-P & PW(A) நாள்.5.5.2009 அன்றைய தேதியில் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். 
 
 
ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை பெற  குறைந்தபட்சம் 5 வருடம் அரசு பணியில் பணிபுரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கொடையானது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு 1/2(சம்பளம்)வீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மொத்த ஊதியத்தில் 16-1/2மடங்கு(கடைசியாக பெற்ற ஊதியம்) அல்லது ரூ.10 லட்சம், இவற்றில் எது குறைவோ அந்த தொகை ஓய்வோ பெறுபவருக்கு வழங்கப்படும். பணியின் போது ஒரு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்திற்கு கீழ்கண்ட கணக்கின் படி பணிக்கொடை வழங்கப்படும்.
:
Sl. No.
Length of Qualifying Service
Rate of Death Gratuity
1.Less than one year2 times of emoluments
2.One year or more but less than 5 years6 times of emoluments
3.5 years or more but less than 20 years12 times of emoluments
4.20 years or moreHalf of emoluments for every completed
six monthly period of qualifying service
subject to a maximum of 33 times of emoluments.
Maximum amount of Death Gratuity admissible is Rs, 10 lakh with effect from 1.1.2006.  

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

 
               ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் 32 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது.
விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரத்தைச்சேர்ந்த ஜெயசாந்தி உள்ளிட்ட 32 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இந்த உத்தரவை பிறப்பித்தார். பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு 2010 ஏப். 1-இல் கொண்டு வந்தது.
அதற்கு முன்பே எங்களை ஆசிரியர்களாக பணிகளில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்பதல் அளித்தனர். இருப்பினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால், எங்கள் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஏற்க மறுத்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாத நிலை ஏற்பட்டால், ஓராண்டு காலத்தில் மத்திய அரசை, மாநில அரசு அணுகி தகுதியில் இருந்து விதிவிலக்கு பெறவேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு கோரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:

மத்திய அரசின் சட்ட விதிப்படி படி, ஆசிரியர்களை பணியில் நியமிக்கமுடியாத நிலை ஏற்பட்டால், மாநில அரசு அதற்கான காலக்கெடுவுக்குள் விதிவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் இல்லாத நிலை ஏற்பட்ட போதும் அரசு அதற்காக மத்திய அரசை அணுகவில்லை. இந்தச் சூழ்நிலையில்  32 மனுதாரர்களையும் ஆசிரியர்களாக பணியில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் தவறு காணமுடியவில்லை. எனவே, 32 பேருக்கும் அதிகாரிகள் தாற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான ஊதியம் பெறுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களை நீக்கம் செய்து தகுதியானவர்களை நியமிக்கலாம். மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவ்வப்போது தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூன் 6-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
 

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



09.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 1.6.1988 முதல் 31.12.1995 வரை பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டார ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் உள்பட ஏராளமான ஓய்வூதியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஓய்வூதியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தாலும், அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஓய்வூதியர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெவ்வேறு காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறு ஓய்வூதியக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஓர் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான 9.8.1989ஆம் தேதியிட்ட அரசாணை செல்லாது என்று கூறி அதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பாரபட்சமற்ற, ஒரேவிதமான ஓய்வூதியக் கணக்கீட்டு முறையை அரசு பின்பற்றுமாறு தனது தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் 1.6.1988-ம் தேதிக்கும் 31.12.1995-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வுபெற்ற ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வி இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.

TNPTF கோரிக்கை மாநாடு


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சிóல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.



இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு தகுதித் தேர்வு மதிப்பெண்களில் 5 சதவீதம் வரை தளர்த்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆந்திரம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 முதல் 20 சதவீதம் வரை தகுதித் தேர்வு மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மதிப்பெண்கள் தளர்த்தப்படாததால் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

69 சதவீத இட ஒதுக்கீடு தவிர மீதமுள்ள 31 சதவீதம் என்பது இட ஒதுக்கீட்டால் பயன் அடைவோர் உள்பட அனைவருக்கும் உரியது. ஆனால், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பொதுப் பிரிவு என்பது இட ஒதுக்கீட்டால் பயன் அடையாதவர்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 122. பொதுப்பட்டியலில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 116.

இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு மாறாகவும், சமூக நீதியை மறுக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலையில் நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் கடந்த ஆண்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இப்பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தகுதித் தேர்வு மதிப்பெண்களில் தேவையான சதவீதம் தளர்த்த வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க TNPTF


ஆசிரியர் சங்க சிக்கண நாணய கூட்டுறவு சங்ங தேர்தல்


செவ்வாய், மார்ச் 26, 2013

TNPTF Executive Meeting

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத் தலைவர் இளங்கோ வரவேற்று ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.
   தமிழினப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்தும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்திட வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் உதயசங்கர், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் சங்க மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் சின்னையா அம்பலம், ஆங்கில மொழியாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் சேவியர், தமிழாசிரியர் கழக மாவட்டப் பொறுப்பாளர் நாகேந்திரன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் சங்கர், வரலாற்று ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் பழனியப்பன், பகுதி நேர ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
 

G.O



  1. 246 பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் 50 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  மொத்த 296 தலைமையரிசியர் பணியிடங்களின் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் அணைவருக்கும் கல்வி திட்டம் நிதிநிலையில் ஈடு செய்தல் குறித்தது
  2. உயர் நீதி மன்ற உத்திரவின் பேரில் தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதி  செய்வதற்கான அறிவுரை கூறுதல் அரசானை
  3. சாஸ்திர பல்கலைக்கழகத்தில் வழங்கும் பி.எட் பட்டம் பிற பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படும்பட்டத்திற்கு இணையாகக் கருதி ஊக்க உயர்வு அளித்தல் அரசாணை 
  4. தமிழ்நாடு தொடக்கக்கல்வி - நீதிமன்ற தீர்பாணைக்குட்பட்டு  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988 பணிக்காலத் தேர்வு-சிறப்புநிலை  அரசாணை நடைமுறைப்படுத்துதல் - அரசு கூடுதல் விபரம் கோருதல்