பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/18/2011

மாணவர்களிடையே போதைப்பழக்கம்: ப.சிதம்பரம் தகவல்

புதுதில்லி: இந்திய நாடு போதை மருந்துகளுக்கான பெரும் சந்தையாக மாறி வருகிறது. பார்ட்டிகள் மற்றும் கல்வி நிலையங்களில் போதை மருந்துகள் புழங்குவது கவலையளிக்கிறது என்று . சிதம்பரம் குறிப்பிட்டார்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று போதைத் தடுப்பு நிறுவனத்தில் (என்சிபி) உரையாற்றும் போது குறிப் பிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் கோகைன் மற் றும் பிற போதை மருந்துகளின் உபயோக மும் கடத்தலும் அதிகரித்துள்ளது. போதை மருந்துகள் தடுப்பு விஷயத்தில் நாம் போது மான கவனத்தை செலுத்தவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது என்று அவர் கூறினார்.
இரு பெரும் போதை மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளுக்கிடையே இந்தியா உள் ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க முக்கோணம், தங்கப்பிறை என்று அழைக்கப்படும் பகுதி இந்தியாவை ஊடுருவிச் செல்கிறது. இதன்காரணமாக, இந்தியா போதைப் பொருட்களின் சந்தையாக மாறிவருகிறது.
போதைமருந்துகள் தடுப்பு அமைப் பில் போதுமான ஆட்கள் நியமிக்கப்பட வில்லை என்பது வருந்தத் தக்க விஷயம். இந்நிலையை மாற்றுவதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று .சிதம்பரம் தெரிவித்தார்.
நன்றி: தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக