பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/20/2011

வேனில் பள்ளிக்கு சென்ற மாணவன்ஆற்றில் பிணமாக மிதந்த பரிதாபம்

மயிலாடுதுறை: பள்ளி சென்ற மாணவன், ஆற்றில் பிணமாக மிதந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த, தரங்கம்பாடியில் தூய ஜான் துவக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 845 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், சுனாமி குடியிருப்பை சேர்ந்த கமல்ராஜ் மகன் ஹரிஸ்குமார், 5, முதல் வகுப்பு படிக்கிறார். ஹரிஸ்குமார், பள்ளி வேனில் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, மாணவர்களை வேனில் ஏற்றிச் சென்றனர். ஆனால், ஹரிஸ்குமார் மட்டும் @வனில் இல்லை. இதை ஆசிரியர்கள், கவனக்குறைவால் விட்டு விட்டனர். மகன் வீடு திரும்பாதது கண்ட பெற்@றார், அவனை பள்ளி உட்பட, பல இடங்களில் @தடினர்.இதையடுத்து பொறையார் போலீசார், மாணவனை @தடி வந்தனர். இந்நிலையில், ஹரிஸ்குமார் உடல், பள்ளி அருகேயுள்ள பக்கிங்காம் கால்வாயில் நேற்று காலை மிதந்தது.இதையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார், பிரேதத்தை கைப்பற்றி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பள்ளி தலைமை ஆசிரியை ஞானபுஷ்பம் மற்றும் ஆசிரியைகள் அனிதா, சித்ரா, வேன் டிரைவர் ஜான் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:
Dinamalar - No 1 Tamil News Paper

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக